1221
뽀비키니비...
|2026.02.01 18:38
조회 19 |추천 0
1,970
티루쿠랄 - 1221
==========================
폴: 욕망의 우유
윤리: 철학
출처: 123.폴: 애도
가사: 오 알라여, 결혼은 생명을 앗아가는 일입니다.
낭송: 오 알라여, 결혼은 생명을 앗아가는 일입니다, 생명을 앗아가는 일입니다.
-------------
파리멜라자가: 폴 = 폴!
오 알라여, 결혼은 생명을 앗아가는 일입니다, 생명을 앗아가는 일입니다.
오 알라여, 과거에서 오신 당신은 생명을 앗아가는 일입니다.
결혼, 결혼은 생명을 앗아가는 일입니다 = 그날 연인과 결혼한 여인들이 자신의 생명을 먹어 치른 마지막 순간이었습니다, 오.
(이전 = 만남의 날. 그날 그는 결혼했고, 나중에 헤어졌습니다. '삶'은 명사입니다. 일반적으로 "여인의 삶의 아침이 풀린다"라고 했습니다(칼리토카, 네이타칼리-2). '일'은 명사입니다. 또한 당신은 '일'을 위한 '일'이었다고도 합니다.)
M. 바라다라사나르: 오! 당신은 저녁이 아닙니다. 당신은 (연인과 함께 살다가 헤어지는) 여인들의 삶의 끝입니다!
신랑: 오! 당신은 따뜻한 저녁, 저녁, 또는 밤입니다. 당신은 모여 사랑받기 전에 삶을 삼키는 일이었습니다. 이것은 저녁을 보고 견딜 수 없었던 맏딸이 한 말입니다.
M. 카루나니디: 저녁이 아니라 연인과 헤어진 여인들의 삶을 마시는 시간인 당신에게 축하를 전합니다!
풀리유르 케시칸: 좋은 저녁입니다! 당신은 저녁이 아닙니다. 당신은 연인과 함께 모였다가 이별의 아픔에 잠긴 여인들의 삶을 앗아가는 마지막 시간입니다!
솔로몬 파파이야: 안녕하십니까! 만세! 당신은 예전의 저녁이 아닙니다. 당신은 기혼 여성들의 삶을 앗아가는 시간입니다.
나마칼 시인: 당신을 저녁이라고 부르는 것은 옳지 않습니다. 오히려 연인들이 만나 헤어진 후 그들의 삶이 사라지는 죽음의 시간이라고 부르는 것이 더 적절합니다. 만세!
티루쿠랄라르 V. 무니사미: 안녕하십니까. 당신은 예전의 저녁이 아닙니다. 당신은 오늘 연인과 결혼한 여인들의 삶을 앗아가는 마지막 시간입니다.
시바요기 시바쿠마르: 저는 당신의 저녁을 축하합니다. 기혼자들의 삶을 앗아가는 당신의 행위를 축하하는 것이 아닙니다.
----------------
திருக்குறள் - 1221
=======================
பால்: காமத்துப்பால்
இயல்: கற்பியல்
அதிகாரம்: 123.பொழுதுகண்டு இரங்கல்
குறள்: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
வாசிப்பு: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.
--------------
பரிமேலழகர்: பொழுது= பொழுதே!
நீ மாலையோ அல்லை= நீ முன்னாள்களின் வந்த மாலையோவெனின், அல்லை;
மணந்தார் உயிர் உண்ணும் வேலை= இருந்தவாற்றான் அந்நாட்காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய், எ-று.
(முன்னாள்= கூடியிருந்தநாள். அந்நாள் மணந்தார் எனவே, பின் பிரிந்தாரதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச்சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங் காலை" (கலித்தொகை, நெய்தற்கலி-2)என்றாற்போல ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாய் இருந்தாய் என்பாரும் உளர்.)
மு.வரதராசனார்: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
மணக்குடவர்: பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
மு.கருணாநிதி: நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
புலியூர்க் கேசிகன்: பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்!
சாலமன் பாப்பையா: பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
நாமக்கல் கவிஞர்: மாலைப் பொழுதே உன்னை மாலை வேளை என்று சொல்வது சரியல்ல கூடிப் பிரிந்த காதலர்களின் உயிர் போகின்ற மரண காலம் என்று சொல்வதுதான் பொருந்தும் வாழ்க.
திருக்குறளார் வீ.முனிசாமி: மாலைப் பொழுதுதே, நீ முந்தைய நாட்களில் வந்த மாலைப்பொழுது அல்ல, அந்த நாளில் காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாய் இப்போது இருக்கின்றாய்.
சிவயோகி சிவக்குமார்: மாலைப் பொழுதோ இல்லை மணமானவர்களின் உயிரை உண்ணும் வேலையோ உன்னை வாழ்த்துகிறேன் பொழுதே.
----------------