티루쿠랄 - 6
===========================
우유: 우유
과학: 생물학
출처: 1. 신의 인사
구절: 함정문에 다섯 개의 덫을 놓은 자, 거짓된 도덕을 심은 자
함정문에 굳건히 서 있는 자
낭송: 함정문에 다섯 개의 덫을 놓은 자, 함정문에 굳건히 서 있는 자, 함정문에 굳건히 서 있는 자, 함정문에 굳건히 서 있는 자, 함정문에 굳건히 서 있는 자, 함정문에 굳건히 서 있는 자.
-------------
파리멜라자하: 함정문에 다섯 개의 덫을 놓은 자 = 참된 입, 눈, 코, 귀, 그리고 그것들을 통해 나오는 다섯 가지 감각기관의 덫을 잘라낸 자; 거짓된 도덕을 품은 자는 함정에 빠진 자, 즉 (오감은 다섯이고, 오감으로 가는 길 또한 다섯이다.
도덕률이 다섯 가지이므로 한 해는 여섯 번이라고 하는데, 이는 "카필라의 노래"에 나오는 것과 같다.
이 네 구절을 암송하며 주님을 기억하고, 그분께 인사드리고, 그분의 길에 서는 자는 집에 이르게 될 것이라고 한다.)
M. 바라다라사나르: 비할 데 없는 주님의 발을 생각하는 자는 다른 사람에 대한 걱정을 떨쳐버릴 수 없다.
마나쿠다바르: 입, 눈, 코, 귀의 오감을 통해 들어오는 생각들, 즉 맛, 냄새, 진실의 냄새 등을 억누르고 거짓되지 않은 도덕의 길에 서 있는 자는 장수할 것이다. 이것이 죽음이 아니겠는가?
M. 카루나니디: 오감을 제어하신 순수한 분의 참된 도덕길을 따르는 자는 영원한 생명을 얻을 것이다.
풀리유르 케시카나: 오감을 통해 생겨나는 욕망을 없애신 분의 거짓 없는 도덕길을 따르는 자는 영원한 생명을 얻을 것이다.
솔로몬 파파이아: 오감을 통해 생겨나는 악한 욕망을 없애고 신의 거짓 없는 도덕길을 따르는 자는 장수할 것이다.
나마칼 카빈자르: 주님은 오감에 대한 욕망이 없으시다. 거짓이 없는 본성을 깨닫고 그 미덕을 따르며 그에 따라 행동하는 자는 그 본성의 완전한 은총을 받을 자격이 있다.
티루쿠랄라르 V. 무니스와미: 혀, 입, 눈, 코, 귀, 즉 몸의 다섯 가지 덫을 통해 들어오는 욕망을 끊어낸 자의 참된 도덕적 길을 걷는 자는 언제나 하나 되어 살 것이다.
시바요기 시바쿠마르: 몸이라는 덫에 다섯 가지 감각을 주신 분께 진실되게 살면 더 높은 삶을 살 수 있다.
----------------
திருக்குறள் - 6
=======================
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
குறள்: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
வாசிப்பு: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
--------------
பரிமேலழகர்: பொறி வாயில் ஐந்து அவித்தான் = மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;
பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;
நீடு வாழ்வார் = பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்தாகலான், அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று.
ஒழுக்கநெறி ஐந்தவித்தானாற் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது, "கபிலரது பாட்டு" என்பது போல.
இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.)
மு.வரதராசனார்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
மணக்குடவர்: மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.
மு.கருணாநிதி: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்
புலியூர்க் கேசிகன்: ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்
சாலமன் பாப்பையா: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்
நாமக்கல் கவிஞர்: பஞ்சேந்திரிய ஆசைகள் என்பதே இல்லாத இயல்பினன் பகவான். பொய்த்தல் இல்லாத அந்த இயல்பை உணர்ந்து அதற்கான நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நடக்கின்றவர்கள். அந்த இயல்பின் பரிபூரண அருளுக்குப் பாத்திரர் ஆவார்கள்.
திருக்குறளார் வீ.முனிசாமி: மெய், வாய், கண் மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள். எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
சிவயோகி சிவக்குமார்: உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.
----------------